இடுகைகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு

படம்
 2021-2022 ஆம் நிதியாண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான       (UYEGP)    (PMEGM)  வேலையில்லா படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், (Pஆநுபுஆ) பராத பிரதமரின் சுயவேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் சிறு குறுந்தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மான்யம் வழங்கும் திட்டம், ஆவின் திட்டங்களுக்கு சிறப்பு முகாம் வருகின்ற 25.03.2022 அன்று மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தூத்துக்குடி என்ற முகவரியில் நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த மாற்றுத் திறனாளிகள் அனைவரும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் ககலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்

படம்
  தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார் ------------- தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 2வது சுற்று கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.03.2022) துவக்கி வைத்தார். முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தியதற்கான அட்டையினை கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:  தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் மூலமாக 4 மாதங்களுக்கு மேல் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மாவட்டம் முழுவதும் 1,10,200 கால்நடைகள் கணக்கெடுக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்து 40 நாட்களுக்குள் 1,10,200 கால்நடை...

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ.7500 கோடியில் 2 சரக்கு பெட்டக முனையங்கள் அமைக்க திட்டம்

படம்
செவ்வாய் 15, மார்ச் 2022  தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பிரதமரின் "கதி சக்தி" திட்டத்தின் கீழ் ரூ.7500 கோடியில், 2 சரக்கு பெட்டக முனையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது.  இது தொடர்பாக தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் டி.கே. ராமச்சந்திரன், சுங்கத்துறை ஆணையர் தினேஷ் கே.சக்கரவர்த்தி, வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் துணைத் தலைவர் பீமல்குமார், தென்னக ரயில்வே மதுரை கோட்ட மூத்த வர்த்தக துணை மேலாளர்  பிரசன்னா, தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்ரமணியன், இந்திய துறைமுக ரயில்  கழக வர்த்தக வளர்ச்சி உதவி பொது மேலாளர் ரமேஷ் பாபு, தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் சங்கர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் கூறியதாவது "தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பிரதமரின் கதி சக்தி என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தற்போது வெளித் துறைமுக திட்டத்தில் ரூ.7500 கோடி மதிப்பில் ஆயிரம் மீட்டர் நீளத்துடன் கூடிய 2 சரக்கு பெட்டக முனையம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் மூலம் 18 மீட்டர் ஆழம் கொண...

உக்ரைன் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இமநாதபுரம் மாவட்ட மருத்துவ கல்லூரி மாணவனுக்கு தூத்துக்குடி விமானநிலையத்தில் அமைச்சர்கள் வரவேற்பு

படம்
  உக்ரைன் நாட்டிலிருந்து இராமநாதபும் மாவட்டத்திற்கு அழைத்துவரப்பட்ட மருத்துவ மாணவனை                                மாண்புமிகு  சமூக நலன் மற்றும் மகளர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதா ஜீவன் அவர்கள்,              மாண்புமிகு மீன்வளம், - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள்                     ஆகியோர் வரவேற்றார்கள் ----------------------- தூத்துக்குடி மாவட்ட விமான நிலையத்தில், உக்ரைன் நாட்டிலிருந்து, இராமநாதபுரம் மாவட்டத்திற்கு அழைத்துவரப்பட்ட மருத்துவ மாணவனை, மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதா ஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன்வளம், - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் , ஆகியார் இன்று (13.03.2022) வரவேற்றார்கள்.  இந்தியாவிலிருந்து அநேகம் மாணவர்கள் மருத்துவம...

"தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர்விநியோகம்* நிறுத்தம்

படம்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர்விநியோகம் செய்யப்படும் வல்லநாடு தலைமை நீரேற்று நிறைய கலியாவூர், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய பகுதிகளுக்கான மின்சாரம் வரக்கூடிய பாதையான  கொம்புகாரநத்தம் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வருகின்ற 15 .3 .2022 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் மாலை 4 .00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே அன்றைய தினம் மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதால் பொதுமக்கள் கிடைக்கின்ற குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் திருமதி சாருஸ்ரீ இ.ஆ.ப. அவர்கள் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்; அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விருது

படம்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில், போதைப் பொருளுக்கு எதிரான  சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டமைக்காக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட  காவல் கண்காணிப்பாளர்; அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விருது வழங்கி சிறப்பித்தார். சென்னையில் இன்று (10.03.2022) மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி இந்த மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 21.12.2021 அன்று 21 கிலோ ஹெராயின் உட்பட போதைப் பொருள்களை பறிமுதல் செய்து கட்டுபடுத்தி போதைப் பொருளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டமைக்காக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் ...

தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்களுக்கு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் வாழ்த்து

படம்
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள திரு ஜெகன் பெரியசாமி அவர்களை தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடி கிளை சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர் இந்த சந்திப்பு நிகழ்வில் கிளை சங்க தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான திரு  R.மாடசாமி அவர்கள் மேயர் திரு ஜெகன் பெரியசாமி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள் இந்த நிகழ்வில் கிளை சங்க நிர்வாகிகள் ஓய்வுபெற்ற நகரமைப்பு அதிகாரி திரு சி ஜெயராஜ் மற்றும் திரு M. ராஜமணி, திரு தங்கசாமி திரு சண்முகவேல், திரு குருசாமி, திருமதி வெங்கடேஸ்வரி ஆகியோரும்  தமிழக அரசின் ஓய்வூதியர்களின் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு அந்தோணிசாமி மற்றும் திரு M. ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்