இடுகைகள்

தூத்துக்குடியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நலத்திட்ட உதவிகள்

படம்
                                                            கொரேனோ வைரஸ் நோய் தொற்று உலகெங்கும் பரவி மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்து வருவதோடு மக்களின் மனதில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்ற இந்த காலகட்டத்தில் நமது நாட்டு மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது ஏழை எளிய மக்கள் அன்றாட பிழைப்புக்கும் உணவுக்கும் விழிபிதுங்கி போராடிக் கொண்டிருக்கும் வேளையில் ஆங்காங்கே மனிதநேயம் கொண்ட மகத்தான மனிதர்களின் உதவும் கரங்கள் ஏழை மக்களுக்கு உதவி செய்துவருகிறது                                                                                               ...

கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒத்துழைப்பு வழஙக வேண்டுகோள்

------------------------------------------------------------------------------------------------------------ கொரோனா வைரஸ் நோயை முற்றிலும் தடுத்திடும் விதமாக சமூக தனிமைப்படுத்துதலை தீவிரப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில், குற்றவியல் விசாரணை நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் கடந்த 24.03.2020 முதல்30.06.2020 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும் போதும்,பொது இடத்தில் நடமாடும் போதும் உரிய முறையில் முககவசம் அணிவது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது  இதற்கு மாறாக வீட்டை விட்டு வெளியில் வரும் போதும், பொது இடங்களில் நடமாடும் போதும் உரிய முறையில் முககவசம் அணியாமல் பொது  இடங்களில் நடமாடுபவர்களுக்கு முதன்முறையாக இருப்பின் காவல் துறையினர், மற்றும் உள்ளாட்சித்துறையினர் மூலம் ரூ.50ஃ-ம் உடனடி அபராதம் விதிக்கப்படும் என்றும் மீண்டும் ...

கொரனோ தொற்று விதிமுறைகளை மீறியதாக தூத்துக்குடி மாவட்டம் குமாரகிரி கிராமத்தில் உளள திருமணம் மண்டபத்திற்கு சீல்

படம்
தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் சமூக பரவலாக மாறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது மேலும் தமிழக அரசு சுய ஊரடங்கு உத்தரவு காலத்தில் பொதுமக்கள் அவசிய பணிகளுக்கு மட்டும் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். வீட்டில் இருந்து வெளியே வரும்போதுமுககவசங்களை அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், அடிக்கடி சோப்பு மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.                                                                           . தூத்துக்குடி மாவட்டம் குமாரகிரி கிராமத்தில்  லெட்சுமி மஹால் திருமணம் மண்டபத்தில்  (24.06.2020)அன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் சுமார் 300 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமலும், திருமண மண்டப வாசலில் சேனிடைசர், கிருமிநாசினி எதுவும் பயன்படுத்தபடாமலும் இருந்துள்ளனர். ...

தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த சாதனையாளர்களிடம் இருந்து டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

படம்
இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் நாட்டிற்கு பெருமை தேடித்தரும் சிறந்த சாகச வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.                                                                                                                                                                                     அதன்படி, இந்திய அரசின் 2019ம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதிற்கு விண்ணப்பிக்கும் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த சாதனையாளர்கள் நிலம், நீர் மற்றும் காற்று தவிரஇவ...

கட்டணம் வசூலிக்காமல் எப்படி தனியார் பள்ளிகளால் ஊதியம் வழங்க முடியும்?- உயர்நீதிமன்றம் கேள்வி

படம்
கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 5-வது கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படவில்லை. பள்ளிகள் திறக்கப்படாவிட்டாலும், தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தினமும் பள்ளிகளின் நிர்வாக வேலை தரப்படுகிறது. தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் வீட்டில் இருந்தவாறு ஆன்லைனில் பாடம் நடத்துகின்றனர்.   இதனிடையே தனியார் பள்ளிகள் மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களை நிர்பந்திக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் உயர்நீதிமன்றத்தில்வழக்குதொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையில்கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் ஆன்லைன் மூலம...

மாலத்தீவிலிருந்து பிற மாநிலங்களைசார்ந்தவர்கள் கப்பல் மூலம் தூத்துக்குடி வ.உ.சி துறை முகத்திற்கு வருகை

படம்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு மாலத்தீவில் இருந்து இந்திய கடற்படையை சேர்ந்த JALASHWA ல் மூலம் வருகை தந்;த தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 198 நபர்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.06.2020)  வரவேற்றார். பின்னர் பயணிகள் கப்பலில் இருந்து இறங்கியதுடன் கைகளை சுத்தம் செய்வதற்கு  சாணிடைசர் வழங்கப்பட்டதையும், பயணிகளின் உடமைகள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, உடல்  வெப்பநிலை கண்டறிவதற்கு தெர்மல் ஸ்கிரினிங் செய்யும் பணிகளையும் பார்வையிட்டார்.    மேலும் பேருந்துகளில் பயணிகளை அழைத்து சென்று காத்திருப்போர் அறையில் மாவட்ட  வாரியாக பிரித்து குடிவரவு நுழைவு மற்;றும் உடைமைகளை சோதனை செய்யும் பணிகளையும், பயணிகளுக்கு மதிய உணவு குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றை வழங்கி மீண்டும் பேருந்துகளில் சொந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கும் பணிகளையும் நேரில் சென்று மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:...

மரவள்ளிகிழஙகில் மாவு பூசசியை கட்டுப்படுத்த மேற்க்கொள்ள வேண்டிய நடவடிககைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

மரவள்ளி உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனில் தமிழ்நாடு முதலிடம்வகிக்கிறது .  மரவள்ளியில் தற்பொழுது மாவுப்பூச்சி தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. தற்சமயம் நிலவி வரும் அதிக வெப்பநிலையின் காரணமாக மாவுப்பூச்சிகளின் தாக்கம ;அதிகமாக தென்படுகிறது.இம்மாவுப்பூச்சி மரவள்ளியின் இளம்தளிர், தண்டு மற்றும் இலையின ;அடிப்பரப்பில் இருந்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும். இதனால் நுனிக்குருதுகள் உருமாறியும், வளர்ச்சிக்குன்றியும் காணப்படும். மேலும் நுனியிலுள்ள இலைகள்ஒன்றுடன் ஒன்றாக இணைத்து முடிக்கொத்தாக தோற்றமளிக்கும். இடைக்கணுக்கள ;நீளம் குறைந்துவிடும். தண்டுகள் சிதைவடைந்து காணப்படும் இதனால் ஒளிச்சேர்க்கையின் வீரியம் குறைந்து கிழங்கு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படும். மரவள்ளிகிழஙகில மாவு பூசசியை கட்டுப்படுத்த மேற்க்கொள்ள வேண்டிய நடவடிககைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்  இப்பாதிப்னை குறைவதற்கு கீழ்க்காணும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையினை பின்பற்றுறுதல் வேண்டும் 1. போதிய அளவு நீர்; பாய்ச்சுதல் பாதிப்பினை குறைக்கும். 2. நடவு செய்யும் பொழுது அடி உரமாக ஒரு எக்டருக்கு 250 கிலோ...