இடுகைகள்

காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

படம்
         தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல்  போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு - பெண்ணை மீட்டு ஒப்படைத்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.  சென்னை முகப்பேரில் உள்ள வுhந டீயலெயn என்ற சமூக சேவை அமைப்பில் பணிபுரியும் மானஷா என்பவர் தங்களது பராமரிப்பில்; மாயா என்ற பெண் இருப்பதாகவும், அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், மாயாவின் உறவினர்களை கண்டுபிடித்து அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கக்கோரி, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார் மனு அளித்தார்.  மேற்படி புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. கணேஷ் மேற்பார்வையில் முத்தையாபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. அன்னராஜ் தலைமையில் பெண் தலைமைக் காவலர் திருமதி. அலாய்ஷியஸ் ரொசாரி மேக்ஸினா மற்றும் காவலர் திரு. ஆறுமுக ந...

வீடு புகுந்து தங்க நகைகளை திருடியவர் கைது - தங்க நகைகள் மீட்பு - கைது செய்த தனிப்படையினருக்கு பாராட்டு

படம்
           தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடியவர் கைது  - ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள 13 பவுன் தங்க நகைகள் மீட்பு - கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடையற்காடு தெற்கு தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி பிச்சையம்மாள் (62) என்பவர் தனது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 13 பவுன் எடை கொண்ட தங்க நகைகள் 5  மோதிரம், ஒரு கைச்செயின் மற்றும் ஒரு இரண்டு வடச்செயின் ஆகியவற்றை 15.05.2020 அன்று யாரோ வீடு புகுந்து திருடிச் சென்று விட்டதாக  16.05.2020 அன்று பிச்சையம்மாள் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் மேற்பார்வையில் ஏரல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. ம...

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் கிராம விழிப்புணர்வு குழு கூட்டம்

படம்
  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி என். கே மஹாலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் கிராம விழிப்புணர்வு குழு கூட்டம் (Village Vigilance Committee meeting)   நடைபெற்றது.  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி எட்டயாபுரம் ரோட்டில் உள்ள என்.கே மஹாலில் இன்று (02.10.2020) கிராம விழிப்புணர்வு குழு கூட்டம் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கலைக்கதிரவன் அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.   இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் கிராமபுறங்களில் உள்ள பொதுமக்கள் உட்கார்ந்து, அவரவர் பகுதிகளில் உள்ளவர்கள் குழுவாக அமர்ந்து கலந்தாய்வு செய்ய வேண்டும். இதற்கு தலைவர், செயலாளர் போன்றெல்லாம் எதுவும் தேவையில்லை. இதில் அனைத்து தரப்பட்ட மக்களும் கலந்து கொண்டு, உங்கள் பகுதிகளில் குறைகள் என்னவென்பதை அறிந்து, பொதுவான நலன் சார்ந்த கருத்துக்களை பரிமாறிக்கொண்டு, உங்கள் பகுதி முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை கண்டறிந்து அவற்றை செயல்படுத்துவதற்கான கூட்ட...

கோவில்பட்டியில் தாணியங்கி சிகன்ல் மற்றும் சி.சிடி.வி கேமிரா , : மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் துவக்கி வைப்பு

படம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி போக்குவரத்து சிக்னல் மற்றும் சி.சி.டி.வி கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முக்கிய இடங்களில் 10 சிசிடிவி கேமராக்களும், கோவில்பட்டி கால்நடை மருத்துவமனை சந்திப்பில் தானியங்கி போக்குவரத்து சிக்னலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை அங்கேயே அமைக்கப்பட்டுள்ள தனி அறை மூலம் காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இந்த தானியங்கி போக்குவரத்து சிக்னல் மற்றும் சிசிடிவி கேமராவை இன்று (02.10.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கபசுரக்குடிநீர் வழங்கினார்.   அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பேசுகையில் தானியங்கி கேமரா மற்றும் 10 சிசி...

கடம்பூரில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் வழக்கம்போல் நின்று செல்ல மத்திய ரயில்வே அமைச்சரிடம் , அமைச்சர் .கடம்பூர் செ.ராஜூ கோரிக்கை

படம்
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் வழக்கம்போல் நின்று செல்ல மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் ஸ்ரீ பியுஷ் கோயல் அவர்களுக்கு மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கோரிக்கை கடிதம் ------------------------------------------------------------------------------------------------------------  மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் ஸ்ரீ பியுஷ் கோயல் அவர்களுக்கும், தென்னக ரயில்வே பொது மேலாளர் அவர்கள் ஆகியோருக்கு கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: சென்னை எக்மோர் மற்றும் அனந்தபுரி இடையே இயக்கபட்டு வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (06723 06724) கோவிட் 19 கொரோனா காலத்தில் சேவை நிறுத்தபட்டு இருந்தது.   தற்பொழுது  சென்னை எக்மோர்  மற்றும் அனந்தபுரி இடையே பயண சேவை மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.  முன்னதாக மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் ஸ்ரீ பியுஷ் கோயல் அவர்களுக்கு நான் வைத்த கோரிக்கையை ஏற்று எனது கோவில்பட்டி தொகுதியில் உள்ள கடம்பூர் ரயில் நிலையத்தில் ...

ரூ.6.67 இலட்சம் மதிப்பில் 2 உயர்கோபுர சோலார் விளக்குகள் ஆட்சி த் தலைவர் ஆய்வு

படம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் பத்மநாபமங்கலம் ஊராட்சியில் கனிம நிதி மூலம் தலா ரூ.6.67 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 2 உயர்கோபுர சோலார் விளக்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் -------------------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் பத்மநாபமங்கலம் ஊராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர சோலார் விளக்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.10.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கனிம நிதி மூலம் தலா ரூ.6.67 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 2 உயர்கோபுர சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் உயர்கோபுர சோலார் விளக்குகள் 10 அமைக்கவும், தெருவிளக்குகள் கூடுதலா 30 அமைக்கவும் வேண்டும் என கோரிக்கை வரப்பெற்றது.   இதனையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று உயர்கோபுர சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டு...

தூத்துக்குடியில் அண்ணல் காந்தியடிகளின் 152வது பிறந்தநாள் : மாவட்ட ஆட்சித் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

படம்
         தூத்துக்குடி காதி அங்காடியில் அண்ணல் காந்தியடிகள் 152வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவ படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் காதி அங்காடியில் குத்துவிளக்கு ஏற்றி சிறப்பு கதர் விற்பனையை துவக்கி வைத்தார்.  --------------------------------------------------------------------------------------------------------------------  தூத்துக்குடி வெஸ்ட் கிரேட் காட்டன் ரோட்டில் உள்ள காதி அங்காடியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் கதர்த்துறையின் சார்பில் அண்ணல் காந்தியடிகள் 152வது பிறந்தநாள் விழா இன்று (02.10.2020) கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு, அண்ணல் காந்தியடிகளின் திருவுருவ படத்தினை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் சிறப்பு கதர் விற்பனையை துவக்கி வைத்தார். முன்னதாக தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித்...