இடுகைகள்

திருச்செந்தூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆய்வு.

படம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ---------------------------- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திருச்செந்தூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் இன்று (07.07.2021) நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள்பேசியதாவது:                                                                      திருச்செந்தூர் பேரூராட்சிக்கென குரங்கணி அருகில் தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரும் தனி குடிநீர் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தினசரி 2.10 எம்எல்டி நீர் திரு...

நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இருவர் கைது

படம்
  தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இருவர் கைது -  2 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் - தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.  தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிலும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று (05.06.2021) தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் திருமதி. ஜெயந்தி அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சங்கர், திருமதி. சரண்யா, தலைமைக் காவலர் திரு. முத்துராஜ், முதல் நிலைக் காவலர் திரு. பாலக்குமார், காவலர்கள் திரு. சிலம்பரசன் மற்றும் திரு. ஆனந்தகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தாளமுத்துநகர் காவல் ந...

" நான் கொரோனா பேசுகிறேன் ''... கவிஞர் ஆ.மாரிமுத்துவின் கொரனோ விழிப்புணர்வு கவிதை

படம்
  நான்  கொரோனா  பேசுகிறேன்.... எனது பிறப்பினை தேடித் தேடி உனது இறப்பினை அடையும்  ஆறறிவு மனிதா நான் கொரோனா பேசுகிறேன் கேள் ! வாழும் உடல்  தேடி அலையும் உயிர்க் கொல்லி நான் ! மனித உடலில் எனை பரப்பும் மாயசக்தி நான் ! உனை நாடாதிருக்க  நீ  கூடாதிரு உனை கொல்லாதிருக்க கூடி நில்லாதிரு உயிரைக்  கொல்வது நோக்கமல்ல உடலெங்கும் பரவி வாழ்வதே ஏக்கம்  ! எனை ஏற்கும் சக்தியிருந்தால் அந்த  சக்தி  பெறும் வழி தெரிந்தால் நீ வாழ்வது நிச்சயம்  நான் வீழ்வது சத்தியம் ..... புத்தனவன் போதனைகள் புதைத்து  விட்டாய் சித்தர்களின் சிந்தனைகள்  சிதறி விட்டாய் செத்தவர்கள் கண்டு பதறும் நீ இப்பொழுதாவாது புதைத்ததை தோண்டியெடு சிதறியதை கூட்டி அள்ளு பாட்டி சொன்ன வைத்தியம்  பாட்டியோடு போவதற்கல்ல என்னோடு போட்டி  போடுவதற்கே உன் உடலில்  வாழப்போவது நீயா  இல்லை நானா ? வீட்டிலிரு விலகியிரு நீ விளைத்த தானியம் மட்டுமே  விழுங்கியிரு உடலால்  தனித்திரு உள்ளத்தால் கூடியிரு ஆதிக்குடி தமிழா மண்ணை நேசி உன் மண்ணில்  விளைந்ததெல்லாம் ருசி புசி உப...

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

படம்
   தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2021-22ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,அவர்கள் தகவல். ---------------------     தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்¤த் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2021-22ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  விண்ணப்பிக்கத் தகுதிகள்       உதவித்தொகை பெற விண்ணப்பிப்பவர்கள் 01.01.2021 அன்று 58 வயது நிறைவடைந்தவர்களாக இருக்க வேண்டும். தமிழ்ப்பணி ஆற்றிய ஆதாரங்களுடன் ஆண்டு வருமானம் ரூ.72000-க்கு மிகாமல் வட்டாட்¤யரிமிருந்து இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழறிஞர்கள் இருவரிடமிருந்து தகுதிநிலைச்சான்று மற்றும் இதர விவரங்களுடன் தூத்துக்குடி மாவட்டத் தமிழ் வளர்ச்¤த் துணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை அ...

விவி மெரைன் புராடெக்ஸ் நிறுவன பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்

படம்
  தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம் அகரம் விவி மெரைன் புராடெக்ஸ் நிறுவன பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை, மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள்  துவக்கி வைத்தார். ------------------------ தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம் அகரம் விவி மெரைன் புராடெக்ஸ் நிறுவன பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் துவக்க நிகழ்ச்சி இன்று (04.07.2021) இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள்  கலந்து கொண்டு, தடுப்பூசி போடும் முகாமினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஊர்வசி அமிர்தராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.  இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்ககளை கொரோனா பாதிப்பிலிருந்து காக்கும் வகையில் ஒன்றிய அரசி...

தூத்துக்குடி அரசுக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.50 இலட்சம் மதிப்பில் கொரோனா வார்டு மின் தூக்கி கட்டிட திறப்பு மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

படம்
  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 இலட்சம் மதிப்பில் கொரோனா வார்டு பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட மின் தூக்கி கட்டிடத்தை, மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தார். மேலும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 668 பயனாளிகளுக்கு ரூ.1.70 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.  -----------------------                                                                                                                                                        தூத...

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பல்வேறு திருப்பணிகள் மற்றும் கல்வி நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு தொடர்பான ஆய்வு

படம்
தூத்துக்குடி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்  பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும், கல்வி நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு தொடர்பாகவும்  மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்  பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும், கல்வி நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு தொடர்பாகவும் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை ...