இடுகைகள்

பெண்ணின் புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றம் செய்து, அவதூறு பரப்பிய வாலிபர் கைது

படம்
  தூத்துக்குடி மாவட்டம், எட்டயாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு பெண் பாலியல் தொழிலுக்கு அழைப்பது போல்,  அந்தப் பெண்ணின் புகைப்படத்தை முகநூலில்  பதிவேற்றம் செய்து, அவதூறு பரப்பிய வாலிபர் கைது - கைது செய்த சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு. கிருஷ்ணகிரி மாவட்டம், கங்காபிரம்பட்டி பட்டையூரைச் சேர்ந்த ராஜா மகன் மஞ்சுநாதன் (28) என்பவர், செல்போனில் ஒருவருக்கு அழைப்பு விடுக்கும்போது தவறுதலாக தூத்துக்குடி மாவட்டம், எட்டயாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு திருமணமான இளம் பெண்ணுக்கு செல்போன் அழைப்பு விடுத்து பேசியுள்ளார். இதனையடுத்து மஞ்சுநாதன், தன்னை சகோதரனாக நினைத்து பேசுமாறு கூறி, அந்த இளம் பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார்.  நாளடைவில் அந்த பெண்ணின் முகத்தை பார்த்து பேச வேண்டும் என்பதற்காக மஞ்சுநாதன், அந்தப் பெண் வீட்டிற்குச் சென்று கடந்த மார்ச் மாதம் ஒரு ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். செல்போனை பெற்றுக்கொண்ட அந்தப் பெண், தனது அடையாள அட்டையை பயன்படுத்...

மணப்பாடு மீனவர் கிராமத்தில் மணல் திட்டினை அகற்றி நாட்டு படகுகள் கடலுக்குள் வந்து செல்வதற்கு ஏதுவாக முகத்துவாரம் அமைக்கும் பணியினை : அமைச்சர் திரு.அனிதாஆர்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

படம்
  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மணப்பாடு மீனவர் கிராமத்தில் மீன் வளத்துறையின் மூலம்  ரூ.15.50 லட்சம் மதிப்பிட்டில் மணல் திட்டினை அகற்றி நாட்டு படகுகள் கடலுக்குள் வந்து செல்வதற்கு ஏதுவாக முகத்துவாரம் அமைக்கும் பணியினை மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதாஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார்கள் ---------------------------------- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மணப்பாடு மீனவர் கிராமத்தில் ரூ.15.50 லட்சம் மதிப்பிட்டில் மணல் திட்டினை அகற்றி நாட்டு படகுகள் கடலுக்குள் வந்து செல்வதற்கு ஏதுவாக முகத்துவாரம் அமைக்கும் பணியினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (07.08.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதாஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்து மணப்பாடு பகுதியில் வசிக்கும்  மீனவ மக்கள் 100 சதவிதம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தினார். அத...

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

படம்
  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமுதாய முதலிட்டு நிதி மற்றும்  வங்கி கிளைகள் வாரியாக 129 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4.64 கோடி மதிப்பிலான கடன் உதவிகளையும், சமுதாய முதலிட்டு நிதியின் மூலம் 22 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான காசோலையினையும் என மொத்தம் ரூ.4.72 கோடி மதிப்பிலான மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதாஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார் ---------------------------------   தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமுதாய முதலிட்டு நிதி மற்றும்  வங்கி கிளைகள் வாரியாக 129 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4.64 கோடி மதிப்பிலான கடன் உதவிகளையும், சமுதாய முதலிட்டு நிதியின் மூலம் 22 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான காசோலையினையும் என மொத்தம் ரூ.4.72 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.க...

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்டம் சார்பாக கொரோனா விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.*

படம்
             தூத்துக்குடி  மாவட்டம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்டம் சார்பாக கொரோனா விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்       06.08.2021*        அன்று பிரையன்ட் நகர் மாடசாமி யாதவ் பத்திர காளியம்மாள் திருமண மஹாலில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.* கொரோனா 3ம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு வாரமாக அறிவித்துள்ளது. அதன்படி  (06.08.2021)     அன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்டம் சார்பாக தூத்துக்குடி பிரையன்ட்நகர் மாடசாமி யாதவ் பத்திர காளியம்மாள் திருமண மஹாலில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.* *♻️அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு சானிடைசர், முககவசங்கள், கபசுரகுடிநீர், துண்டுபிரசுரங்கள் வழங்கியதுடன், பொதுமக்கள் முக கவசம் அண...

சமூக நீதி மற்றும் கிராம விழிப்புணர்வு கூட்டம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

படம்
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்;லைக்குட்பட்ட நாட்டார்குளம் சூசையப்பர் கோவில் வளாகத்தில் வைத்து சமூக நீதி மற்றும் கிராம விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்;லைக்குட்பட்ட நாட்டார்குளம் சூசையப்பர் கோவில் வளாகத்தில் வைத்து ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் முன்னிலையில் சமூக நீதி மற்றும் கிராம விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் இன்று (06.08.2021) நடைபெற்றது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பளார் அவர்கள் பேசும்போது இந்த கிராம விழிப்புணர்வு கூட்டம் கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று, அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் இளைஞர்களிடையே ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். காவல்துறை எப்போதும்  உங்கள் நண்பqர்கள் தான், உங்கள் ஊரில் சிறு சிறு பிரச்சனைகள் வந்தால், அதை உடனடியாக காவல்துறைக்கு தகவல்  தெரிவித்தால், அதை உடனடியாக  நிவர்...

97 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் : சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் வழங்கினார்.

படம்
  தூத்துக்குடி டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் 97 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் அவர்கள் வழங்கினார்.  ---------------- தூத்துக்குடி டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் 97 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (06.08.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் அவர்கள் கலந்துகொண்டு ரேசன் கார்டுகளை வழங்கினார்.  பின்னர் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் அவர்கள் தெரிவித்ததாவது:           தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் கடந்த ஜனவரி முதல்  ஜூன் வரை குடும்ப அட்டைகள் விண்ணப்பித்ததில் 22.7.2021 அன்று 4566 நபர்களுக்கு புதிய குடும்ப ...

தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி தேவைபடும் மூத்த குடிமக்கள், தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண . . இலவச தொலைபேசி எண்-14567 மாவட்ட ஆட்சியர் தகவல் .:

படம்
  தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி தேவைபடும் மூத்த குடிமக்கள்; கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்-14567 மூலம்; மாவட்ட சமூகநல அலுவலர் அவர்களை தொடர்பு கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் - மாவட்டஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் -----------------------------       மூத்த குடிமக்களை காக்கும் பொருட்டு தேசிய மூத்த குடிமக்கள்  உதவி எண்: 14567 புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்க்கையில் எழும் பிரச்சனையில் இருந்து விடுபட, தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள, கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்-14567-சமூகநீதி மற்றும் உரிமைத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி N;தவைபடும் மூத்த குடிமக்கள்; கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்-14567 மூலம்; மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், தூத்துக்குடி, அவர்களை தொடர்பு கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.  .