இடுகைகள்

ஆழ்வார்திருநகரி மற்றும் புன்னக்காயல் ஊராட்சியில் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்

படம்
           ஆழ்வார்திருநகரி  மற்றும் புன்னக்காயல்  ஊராட்சியில்   மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்                              . -------------------------  தூத்துக்குடி மாவட்டம்,  ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம்                              புன்னக்காயல் ஊராட்சி  திருமண மண்டபத்தில்  (28.04.2022)   அன்று நடைபெற்ற மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்களின் மனுக்கள் பெறும் முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்,இ.ஆ.ப., அவர்கள், பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு தெரிவிக்கையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த 24.04.2022 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்திட ஆணையிட்டிருந்தார்கள். அதனடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம்    புன்னக்காயல் ஊர...

செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

படம்
  தூத்துக்குடியில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார் --------------------------- தூத்துக்குடி குரூஸ் பர்னாந்தீஸ் சிலை அருகில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.04.2022) தொடங்கி வைத்தார். மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.ஜெகன் பெரியசாமி அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.லோக பாலாஜி சரவணன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திருமதி.சாருஸ்ரீ, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசுகையில் .... விபத்து இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ஒவ்வொரு மாதமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோருடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது.  நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துற...

தூய்மை பாரதம் குறித்து. அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம்

படம்
  தூய்மை பாரதம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. --------------------------- தூய்மை பாரதம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தலைமையில் இன்று (23.04.2022) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.ஜெகன் பெரியசாமி அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் பேசியதாவது: மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் எல்லா உள்ளாட்சிகளுக்கும் தமிழகம் தூய்மை மாநிலமாக திகழ வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தி இருக்கிறார்கள். தமிழகம் தூய்மை மாநிலமாக இருக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் ஒரு சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் எல்லா அமைப்புகளும் பங்கேற்க வேண்டும். குறிப்பாக சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தில...

உலக ஓவியர்தினத்தில் - ஓவியப் பயிற்சி முகாம் மற்றும் ஓவியக் கலைக் காட்சி

படம்
  உலக ஓவியர்தினம் - ஓவியப் பயிற்சி முகாம் மற்றும் ஓவியக் கலைக் காட்சிகள் நடத்துதல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு                 தூத்துக்குடி மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் வாயிலாக  6 வயது முதல் 16 வயது வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில்; சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், மற்றும் கராத்தே ஆகிய கலைகளில பகுதி நேரமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.                 தமிழகம் முழுவதும் செயல்படும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக உலக ஓவியர் தினத்தன்று  ஓவிய பயிற்சி பட்டறை நடத்திடவும் அதனை தொடர்ந்து சென்னையில் மாநில அளவிலான கலைக்காட்சி நடத்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்ஓவியப்பயிற்சி முகாம்களில் மரபுசார்ந்த ஓவியங்கள் துணி ஓவியங்கள், கண்ணாடி ஓவியங்கள், பேப்பர் ஓவியங்கள், பானை, மரம் ஓவியங்கள், வாட்டர் கலர் ஓவியங்கள், பென்சில் ஓவியங்கள் உள்ளிட்ட ஓவியங்களும் இடம்பெறும் வகையில்; நடத்த...

மாஸ்டர் ஆர்கே பறக்கும்படை ஜிம்னாஸ்டிக் பள்ளி மாணவர்கள் சாதனை

படம்
 மாஸ்டர் ஆர்கே பறக்கும்படை ஜிம்னாஸ்டிக் பள்ளி மாணவர்கள் சாதனை தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ லலிதா வித்யாலயா பள்ளியில்   கடந்த   17-4-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மாஸ்டர் ஆர்கே பறக்கும் படை ஜிம்னாஸ்டிக் பள்ளியை சேர்ந்த நாற்பத்தி ஆறு மாணவ மாணவிகள் ஒன்றரை கிலோமீட்டர் ( Cartwheel ) அடித்து வேர்ல்டு ஐகான் அவார்டு மூலமாக புதிய உலக சாதனை படைத்தனர் இந்த உலக சாதனை போட்டியை  புதுக்கோட்டை  காவல் ஆய்வாளர்  உயர் திரு. ரமேஷ் அவர்கள் துவக்கி வைத்து மாணவர்கள்  இன்னும்  இது போன்ற பல சாதனை படைக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தி  வாழ்த்தி பேசினார்    இந்த சாதனை போட்டியில்  4 வயது முதல் 12 வயது முதல் உள்ள மாணவ மாணவிகள் ஜிம்னாஸ்டிக் 10 புதுவிதமான உலக சாதனைகள் வேர்ல்டு ஐகான் அவார்டு மூலமாக நிகழ்ச்சி ஏற்பாடுகளை திரு மாஸ்டர் ஆர்கே அவர்கள் செய்திருந்தார்  இந்த  நிகழ்ச்சிக்கு சிவசேனா கட்சித் தலைவர் திரு கோமதி ராஜ் அவர்கள் தலைமை தாங்கினார்  இந்த போட்டியில்  கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு குரோஸ்கி நிறுவனம் சார்பாக டீசர்ட் வழங்கப...

HMS : தமிழ்நாடு அனைத்து தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு. சார்பாக மாவட்ட அளவிளான ஆலோசனை கூட்டம்

படம்
    HMS : தமிழ்நாடு அனைத்து தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 7-2- 2022 சனிக்கிழமை அன்று  தூத்துக்குடி மாவட்ட HMS  அலுவலகத்தில்  வைத்து ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது சங்கம் அமைத்தல், மற்றும் மாநில அரசு கொடுக்கும் பணப் பயன்களை எப்படி தொழிலாளர்களுக்கு பெற்றுத்தருவது , போன்ற  விபரங்கள்  வழங்கப்பட் டது   இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் மின்னல் அஞ்சத் தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளர்களாக K.V திருப்பதி H.M.S ன் மாநில செயலாளர் மற்றும் TALUF மாநில பொதுச் செயலாளர் மற்றும் மண்டலத் தலைவர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்  இந்த கூட்டத்திற்கு சமூகப்  போராளி பேராசிரியர் பாத்திமா பாபு மற்றும் சாரா கலை பயிற்சி பள்ளி தாளாளர் ஷாநவாஸ் , தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை செயலாளர் ஞானதுரை மற்றும் நமது எழுத்தாணி ஆசிரியர் சிவகாமி நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்  HMS ஆலோசனை கூட்டத்திற்கு கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்  இந்த சங்கத்தில் இணைவதினால்  ஏற்படுகின்ற பலன்கள் குறித்தும்...

Zomato ஊழியர் சார்பாக தூத்துக்குடியில் தண்ணீர் பந்தல் திறப்பு

படம்
  தூத்துக்குடி மாவட்ட Zomato ஊழியர் சார்பாக தூத்துக்குடியில் 4-4-2022 திங்கள் கிழமையன்று  கோடை வெயில் தாக்கத்திலிருந்து பொதுமக்கள்   தங்கள்   தாகம் தனிக்கும்  வகையில்   குரூஸ் பர்னாந்து சிலை அருகில் தண்ணீர்  மற்றும் மோர் பந்தல்  அமைக்கப்பட்டது  இந்த தண்ணிர் மற்றும் மோர் பந்தலை தூத்துக்குடி மத்திய காவல் நிலைய  ஆய்வாளர் திரு ஜெயபிரகாஷ்  அவர்கள்  கலந்து கொண்டு திறந்து வைத்து சிறப்பித்தார் ,பின்னர் பொது மக்களுக்கு மோர் வழங்கப்படது இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் போக்கு வரத்து பாதுகாப்பு காவலர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.  இந்த ஏற்பாட்டினை தூத்துக்குடி மாவட்ட Zomato நகர பொறுப்பாளர்  மகேஸ்வரன் அவர்களும் மற்றும்  அனைத்து Zomato ஊழியர்களும்  செய்தனர்   இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் துணை செயலாளர் ஸ்டீபன் அவர்களும் கலந்து கொண்டனர்.