இடுகைகள்

சாயர்புரத்தில் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் தூய்மை பணி.

படம்
 சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் சாயர்புரத்தில் தூய்மை பணி.   கடந்த 14-10-2022  வெள்ளி கிழமையன்று   சாயர்புரத்தில்  உள்ள டாக்டர். ஜி. யு. போப்  பொறியியல்  கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் சார்பில் மாணவ மாணவிகள் தூய்மை இந்தியா தினத்தை ஒட்டி சாயர்புரம் பகுதியில் தூய்மை பணி நடைபெற்றது.      இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் திரு. ரா.ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக சாயர்புரம் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி திரு.சுப்பிரமணியன்  தொடங்கி வைத்து தூய்மை இந்தியா பணியை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.  வார்டு கவுன்சிலர் திரு.கண்ணன், மேற்பார்வையாளர் திரு.நித்திய கல்யாண் உறுதிமொழி கூறினார். மாணவ மாணவிகள் சாயர்புரம் தெருவில்  தூய்மை பணி செய்தனர்.  இந்த நிகழ்ச்சியை நாட்டு நல பணி திட்ட அலுவலர் உதவி பேராசிரியர் சா.டென்னிசன் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் இயந்திரவியல் துறை தலைவர் திரு.கனிசெல்வன், திரு.தாமஸ், திர...

தூத்துக்குடி 3ம் கேட் பாலம் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு

படம்
  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 3ம் கேட் பாலம் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு  ----------------------- தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 3ம் கேட் பகுதியில் நடைபெற்று வரும் பாலம் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.10.2022) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:  தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள 3ம் கேட் பாலம் என்பது மிகவும் சிக்கலான பாலம். இந்த பாலமானது தூத்துக்குடி ரயில்வே கேட்டுக்கு வடபுறமும், தென்புறமும் இணைக்கக்கூடியது. இந்த பாலத்தினை நெடுஞ்சாலைத்துறையினர் பராமரித்து வருகிறார்கள்.  இந்த பாலத்தில் மொத்தம் 12 டெக்குகள் உள்ளது. ஓவ்வொரு டெக்குக்கும் இடையே இணைப்பு உள்ளது. இதில் ரயில்வே பாலத்துக்கு மேல் உள்ள 2 டெக்குகள் பழுதடைந்து சீல்; செய்யும் நிலை ஏற்பட்டது. இப்பழுதினை கண்டுபிடித்து கடந்த 2ம் தேதியில் இருந்து சீரமைப்பு பணியை செய்து வருகிறார்கள். பணிகள் முடிந்துவிட்டது. இரண்டு இணைப்புகளுக்கு இடையே ரப்பர் பொறுத்தப்ப...

தூத்துக்குடி கவிஞர் ஆ. மாரிமுத்து அவர்களின் கவிதை தொகுப்பு வெளியீடு:

படம்
 உளி தீண்டா கல்லோவியம்  கவிதை நூல் வெளியீட்டு விழா.  தூத்துக்குடி சார்ந்த  கவிஞர் மாரிமுத்து அவர்கள்  தான் எழுதிய கவிதைகளை   "உளி தீண்டா கல்லோவியம்"   என்ற பெயரில்  கவிதை   தொகுப்பாக தொகுத்து வெளியிட்டு விழா  02-10-2022 ஞாயிறு மாலையில்  அன்று தூத்துக்குடி  பாம்ஸ் அகாடமி அரங்கில் நடைபெற்றது                   தூத்துக்குடியில்   கவிஞா்  ஆ.மாாிமுத்து அவர்கள் எழுதிய    "உளி தீண்டா கல்லோவியம் "  கவிதை  நூல்  வெளியீட்டு விழா  இந்தியன்  சேம்பா் அருகில் உள்ள பாம்ஸ் அகாடமி அரங்கத்தில்   நாசரேத் தோி எழுத்தாளா்  கண்ணகுமார விஷ்வரூபன்  அவா்கள்  தலைமையில்  ,  கோவில்பட்டி  நாடாா் காமராஜ் மெட்ரிக்குலேசன் பள்ளி  முதல்வா்  பிரபு  அவா்கள்  முன்னிலையில்  தூத்துக்குடி  தூய மாியன்னைக் கல்லூாி தமிழ்த்துறை பேராசிாியரும்  தூத்துக்குடி  மாவட்ட தமிழ்நாடு கலைஇலக்கி...

நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்க சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு மரியாதை

படம்
 தூத்துக்குடி நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வு ஊழியர் சங்க சார்பாக முன்னாள் முதல்வரும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114வது பிறந்த நாளில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை   

மாநகராட்சி , நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில அமைப்பு செயலாளர் காரைக்குடி திரு.M. மாடசாமி அவர்கள் மறைவு

படம்
                        வருந்துகிறோம்  மனித நேய மிக்கவரும், தொண்டு மனபாங்கு கொண்டவரும்  தமிழ்நாடு மாநகராட்சி நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில அமைப்பு  செயலாளரும் , நண்பர்கள் நல சேமிப்பு சங்க  பொருளாளரும்,  இல்லத்து பிள்ளைமார் சங்க பொருளாளரும் மான  காரைக்குடி திரு.M. மாடசாமி அவர்கள் 14.9.2022 நேற்று இரவு 11.50 மணிக்கு காலமானார்   என்பதை   ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்  அன்னாரின் மறைவிற்கு தூத்துக்குடி மாநகர கிளை சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது . இப்படிக்கு  இரா. மாடசாமி தூத்துக்குடி மாநகர கிளை சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள்

தூத்துக்குடியில் நடைபெற்ற மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டி

படம்
  தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை கழகம் மற்றும்  புல் பாக்சிங்  கிளப் சார்பில் தென் மண்டல அளவிலான போட்டி சோரீஸ் புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து கடந்த. 28-8-2022     ஞாயிற்றுக்கிழமை  அன்று நடைபெற்றது இந்தப் போட்டிகளை டாக்டர் ஜாஸ்மின் ராஜேஷ் ,மாவட்ட விளையாட்டு நல அலுவலர் ஜெயரத்தின ராஜன் ஆகியோர் துவக்கி வைத்தார்கள்  அய்யனடைப்பு பஞ்சாயத்து தலைவர் அதிர்ஷ்ட கணபதி, ராஜேந்திரன் வழக்கறிஞர் லாரன்ஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்  இந்த போட்டிகள்  தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி மதுரை விருதுநகர் திருச்சி ஈரோடு சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 250 க்கு மேற்பட்ட வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கு பெற்றனர் மண்டல அளவிலான நடைபெற்ற இப் போட்டியில் 92 கிலோ ஹெவி வெயிட் பிரிவில் தூத்துக்குடி அபிஷேக் போல் சீலன் முதலிடம் பெற்று சாதனை படைத்தார் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பின் முதலிடம் விருதுநகர் இரண்டாவது இடத்தை கன்னியாகுமாரி மற்றும் மூன்றாவது இடத்தை தூத்துக்குடி பிடித்தது,  இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட  ஏ .எஸ் பி...

மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியர்கள், சங்க தூத்துக்குடி கிளை சார்பாக வ.உ..சி அவர்களின் சிலைக்கு மரியாதை

படம்
   சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல்  வ .உ. சிதம்பரனார் அவர்களின்  151 வது பிறந்தநாளான 5-9-2022 திங்கள்கிழமையான  இன்று நாடு முழுவதுவும்  கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு  ,  மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியர்கள், சங்க தூத்துக்குடி கிளை  சார்பாக  தூத்துக்குடி மாநகராட்சி பழைய கட்டிட வளாகத்தில்  அமைக்கப்பட்டுள்ள   வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவ  சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள்  சங்க அமைப்பு செயலாளர் திரு சி ஆனந்தன் , ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி கீதா மாரியப்பன் , மாமன்ற உறுப்பினர் சுரேஷ் குமார் அவர்கள்  , தமிழ்நாடு நகராட்சி , மாநகராட்சி ஓய்வூதியர்கள்  தூத்துக்குடி  கிளை  சங்க தலைவர் இரா.மாடசாமி ஆகியோர்  வ.உ..சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்க துணைத் தலைவர் நேரு,  செயலாளர்  B.ஜெயசீலன் , இணைச...